ஓங்கார கணபதியே ஒஸ்லோ கணபதி
|
அன்பார்ந்த இந்து மக்களுக்கு |
இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம். நாம் உயிருடன் ஒன்றும்போதுதான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போதுதான் துன்பம் அகல முடியும். அறிவுடன் ஒன்றும்போதுதான் பிழைகள் அகல முடியும் ( சுவாமி விவேகானந்தர்) ..............................................................................................................................................................எமது இணையத்தளம் norhindus.com புதிதாக உருவாக்கப்பட்டு இணையத்தள வாசிகளின் நலனுக்காக பாவனையில் விடப்பட்டுள்ளது இத்தளமானது இந்துமதக் கட்டுரைகள் தத்துவங்கள் பக்திகானங்கள் என்பவற்றை தன்னகத்தே கொண்டதாகவும் நோர்வேயில் இந்துமதத்தினை பின்பற்றுவோர்க்கு உறுதுணையாகவும் ஊக்குவிக்குமுகமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. எமது மக்களின் ஆக்கங்கள் எமது இணையத்தளத்தை வளப்படுத்தவும் நீங்கள் தரும் ஊக்கங்கள் எமது மதத்தை மேன்மேலும் வளர்ப்பதற்கு உறுதுணையாகவும் அமையும் என நம்புகின்றோம்

|
|
Read more...
|
|